
டர்பன்: இருமனம் இணையும் திருமண நிகழ்வை வாழும் வாழ்க்கை முழுவதும் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகிறது காலம் கடந்து நிற்கும் புகைப்படங்கள். அதுவும் இன்றைய சூழலில் திருமணத்துக்கு முன், பின் என புகைப்படங்கள் எடுப்பது ட்ரெண்ட். இந்தச் சூழலில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தன் திருமணத்திற்கு புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞரிடம் அதற்காக அவர் வசூலித்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார் ஒரு பெண். தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக அதற்கான காரணத்தை அந்தப் பெண் முன்வைத்துள்ளார்.
புகைப்படக் கலைஞர் மற்றும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான வாட்ஸ்அப் சாட் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. முதலில் அந்தப் பெண் வேடிக்கையாக இதை செய்கிறார் என்று தான் புகைப்படக் கலைஞர் எண்ணியுள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் சூழலைப் புரிந்துகொண்ட அவர் அப்படியே அந்த வாட்ஸ்அப் உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
https://ift.tt/iC3bQYS
டர்பன்: இருமனம் இணையும் திருமண நிகழ்வை வாழும் வாழ்க்கை முழுவதும் நினைவில் வைத்துக் கொள்ள உதவுகிறது காலம் கடந்து நிற்கும் புகைப்படங்கள். அதுவும் இன்றைய சூழலில் திருமணத்துக்கு முன், பின் என புகைப்படங்கள் எடுப்பது ட்ரெண்ட். இந்தச் சூழலில் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் தன் திருமணத்திற்கு புகைப்படம் எடுத்த புகைப்படக் கலைஞரிடம் அதற்காக அவர் வசூலித்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார் ஒரு பெண். தனக்கு விவாகரத்து ஆகிவிட்டதாக அதற்கான காரணத்தை அந்தப் பெண் முன்வைத்துள்ளார்.
புகைப்படக் கலைஞர் மற்றும் அந்தப் பெண்ணுக்கும் இடையிலான வாட்ஸ்அப் சாட் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது. முதலில் அந்தப் பெண் வேடிக்கையாக இதை செய்கிறார் என்று தான் புகைப்படக் கலைஞர் எண்ணியுள்ளார். ஆனால், ஒரு கட்டத்தில் சூழலைப் புரிந்துகொண்ட அவர் அப்படியே அந்த வாட்ஸ்அப் உரையாடலை ஸ்கிரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

0 கருத்துகள்