Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

பாலக்கோட் தாக்குதல் பற்றி முன்பே அறிந்திருந்த அர்னாப்? கசிந்த வாட்ஸ்அப் உரையாடல்

அர்னாப் கோஸ்வாமியிடமிருந்து கசிந்த வாட்ஸ்அப் உரையாடலின்படி,  பிப்ரவரி 23, 2019 தேதியே அவர் பாலக்கோட் தாக்குதல் பற்றி பேசுகிறார். பாகிஸ்தானின் பாலக்கோட்டில் ஐ.ஏ.எஃப் தலைமையிலான வான்வழித் தாக்குதல் நடப்பதற்கு சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த உரையாடல் நடந்துள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு முன்கூட்டியே, பாகிஸ்தானை தாக்கும் இந்தியாவின் திட்டம் குறித்து ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அறிந்திருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த முக்கியமான தகவலை அவர் முன்னாள் பார்க் (Broadcast Audience Research Council) தலைவர் பார்த்தோ தாஸ்குப்தாவுடன் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

image

அர்னாப் கோஸ்வாமிக்கும், பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையில் கசிந்த வாட்ஸ்அப் உரையாடலின்படி, பத்திரிகையாளர்  மற்றும் டிவி உரிமையாளர் அர்னாப், "ஒரு பெரிய வேலை செய்யப்படும்" என்று கூறுகிறார், இது "சாதாரண தாக்குதலை விட பெரியது" என்கிறார். சுவாரஸ்யமாக இந்த உரையாடல் பிப்ரவரி 23, 2019 நடந்துள்ளது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் நடந்த ஐ.ஏ.எஃப் தலைமையிலான வான்வழித் தாக்குதல்களுக்கு சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.

கசிந்த வாட்ஸ்அப் அரட்டைகளில் விவாதிக்கப்பட்ட முக்கியமான தகவல்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியரின் நோக்கங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள், இப்போது கசிந்த உரையாடல் குறித்து உள் விசாரணை கோருகின்றன. ஏற்கெனவே அர்னாப் கோஸ்வாமி ஒரு டிஆர்பி ஊழலில் ஈடுபட்டதாக விசாரிக்கப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3iq6ztt

அர்னாப் கோஸ்வாமியிடமிருந்து கசிந்த வாட்ஸ்அப் உரையாடலின்படி,  பிப்ரவரி 23, 2019 தேதியே அவர் பாலக்கோட் தாக்குதல் பற்றி பேசுகிறார். பாகிஸ்தானின் பாலக்கோட்டில் ஐ.ஏ.எஃப் தலைமையிலான வான்வழித் தாக்குதல் நடப்பதற்கு சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த உரையாடல் நடந்துள்ளது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு முன்கூட்டியே, பாகிஸ்தானை தாக்கும் இந்தியாவின் திட்டம் குறித்து ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அறிந்திருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், இந்த முக்கியமான தகவலை அவர் முன்னாள் பார்க் (Broadcast Audience Research Council) தலைவர் பார்த்தோ தாஸ்குப்தாவுடன் பகிர்ந்து கொண்டதாகவும் தெரிகிறது.

image

அர்னாப் கோஸ்வாமிக்கும், பார்த்தோ தாஸ்குப்தாவுக்கும் இடையில் கசிந்த வாட்ஸ்அப் உரையாடலின்படி, பத்திரிகையாளர்  மற்றும் டிவி உரிமையாளர் அர்னாப், "ஒரு பெரிய வேலை செய்யப்படும்" என்று கூறுகிறார், இது "சாதாரண தாக்குதலை விட பெரியது" என்கிறார். சுவாரஸ்யமாக இந்த உரையாடல் பிப்ரவரி 23, 2019 நடந்துள்ளது. பாகிஸ்தானின் பாலக்கோட்டில் நடந்த ஐ.ஏ.எஃப் தலைமையிலான வான்வழித் தாக்குதல்களுக்கு சுமார் மூன்று நாட்களுக்கு முன்பு இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது.

கசிந்த வாட்ஸ்அப் அரட்டைகளில் விவாதிக்கப்பட்ட முக்கியமான தகவல்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியரின் நோக்கங்கள் குறித்த கேள்வி எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள், இப்போது கசிந்த உரையாடல் குறித்து உள் விசாரணை கோருகின்றன. ஏற்கெனவே அர்னாப் கோஸ்வாமி ஒரு டிஆர்பி ஊழலில் ஈடுபட்டதாக விசாரிக்கப்படுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்