
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
விஜய் வசந்த்க்கு நேற்றிரவு வாட்ஸ்அப் மூலம் வந்த செய்தியில், சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் செய்த உண்மைக்கு புறம்பான பதிவை நீக்குவதற்கு வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் அதற்காக ஓ டி பி என்னை கூற வேண்டுமென ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை அணுகிய போது, விஜய் வசந்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதுதவிர அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர்.

சைபர் கிரைம் காவல் துறையில் இதுகுறித்து புகார் அளிக்க உள்ள நிலையில், தனது சமூகவலைதள பக்கங்களை பயன்படுத்தி தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என விஜய் வசந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3pguh0T
கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின் சமூக வலைதளப் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
விஜய் வசந்த்க்கு நேற்றிரவு வாட்ஸ்அப் மூலம் வந்த செய்தியில், சமூக வலைதளமான ட்விட்டரில் அவர் செய்த உண்மைக்கு புறம்பான பதிவை நீக்குவதற்கு வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும் அதற்காக ஓ டி பி என்னை கூற வேண்டுமென ஒரு லிங்க் வந்துள்ளது. அந்த லிங்கை அணுகிய போது, விஜய் வசந்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதுதவிர அவரது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களையும் மர்ம நபர்கள் முடக்கியுள்ளனர்.

சைபர் கிரைம் காவல் துறையில் இதுகுறித்து புகார் அளிக்க உள்ள நிலையில், தனது சமூகவலைதள பக்கங்களை பயன்படுத்தி தவறான தகவல்களை யாரேனும் பரப்பினால் பொதுமக்கள் அதை நம்ப வேண்டாம் என விஜய் வசந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்