
மதுரையில் டாஸ்மாக் எலைட் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த மேலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா, மதுரை தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காளவாசல் பகுதியில் செயல்படும் எலைட் மதுபான கடையில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 200 ரூபாய்க்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், கடைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் பணிக்கு அமர்த்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, கடையின் மேற்பார்வையாளர் ராஜா, விற்பனையாளர்கள் வேல்பாண்டி, இளமாறன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதே போன்று, எல்லீஸ் நகரில் செயல்படும் மதுபான கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருமங்கலம் மதுபான கடையில், விற்பனை தொடங்காத நிலையில் கையிருப்பில் இருந்த 59 ஆயிரத்து 880 ரூபாய் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரி அருண் சத்யா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/305mrwz
மதுரையில் டாஸ்மாக் எலைட் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த மேலாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அருண்சத்யா, மதுரை தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காளவாசல் பகுதியில் செயல்படும் எலைட் மதுபான கடையில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 200 ரூபாய்க்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும், கடைக்கு சம்பந்தமில்லாத நபர்கள் பணிக்கு அமர்த்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, கடையின் மேற்பார்வையாளர் ராஜா, விற்பனையாளர்கள் வேல்பாண்டி, இளமாறன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இதே போன்று, எல்லீஸ் நகரில் செயல்படும் மதுபான கடையின் மேற்பார்வையாளர், விற்பனையாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருமங்கலம் மதுபான கடையில், விற்பனை தொடங்காத நிலையில் கையிருப்பில் இருந்த 59 ஆயிரத்து 880 ரூபாய் குறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அதிகாரி அருண் சத்யா தெரிவித்துள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்