Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

நடுக்கடலில் திடீரென தீப்பற்றி எரிந்த படகு: தண்ணீரில் குதித்து தத்தளித்த காசிமேடு மீனவர்கள்

சென்னை காசிமேட்டில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகு ஆந்திராவில் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து கடலில் குதித்து தத்தளித்த மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றினர்.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள், மாரியப்பன் என்பவரின் படகில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்றனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணம்பட்டினம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சென்ற படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

image

இதையடுத்து தீ மளமளவென படகு முழுவதும் பரவியதால், மீனவர்கள் 9 பேரும் கடலில் குதித்தனர். நெடுநேரமாக கடலில் மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர், அவர்களை காப்பாற்றி கிருஷ்ணம்பட்டினத்தில் கரை சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து 9 மீனவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தீப்பிடித்து எரிந்த படகின் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் எனவும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/3h5bPT3

சென்னை காசிமேட்டில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற படகு ஆந்திராவில் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து கடலில் குதித்து தத்தளித்த மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றினர்.

மீன்பிடித் தடைக்காலம் முடிந்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 9 மீனவர்கள், மாரியப்பன் என்பவரின் படகில் ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக சென்றனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணம்பட்டினம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் சென்ற படகு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

image

இதையடுத்து தீ மளமளவென படகு முழுவதும் பரவியதால், மீனவர்கள் 9 பேரும் கடலில் குதித்தனர். நெடுநேரமாக கடலில் மீனவர்கள் தத்தளித்து கொண்டிருந்த போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் படையினர், அவர்களை காப்பாற்றி கிருஷ்ணம்பட்டினத்தில் கரை சேர்த்தனர்.

இதைத் தொடர்ந்து 9 மீனவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, தீப்பிடித்து எரிந்த படகின் மதிப்பு சுமார் ரூ. 1 கோடி இருக்கும் எனவும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்