
நடிகர் யோகி பாபு இன்று கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில், நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.அதேசமயம், தடுப்பூசிகள் குறித்த தவறான வதந்திகளால் மக்கள் அச்சப்பட்டு தவிர்த்தும் வருகின்றனர். இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர் அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் நடிகர் யோகிபாபு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று எம்.ஜி.எம் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

நடிகர் யோகி பாபு இன்று கோவிஷீல்டு முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவலால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் சூழலில், நம்மை காக்கும் ஆயுதமாக தடுப்பூசிகள் விளங்குகின்றன என்று மருத்துவத்துறையினர் பரிந்துரைக்கின்றனர். அதன்படி, இந்திய மக்கள் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு வருகின்றனர்.அதேசமயம், தடுப்பூசிகள் குறித்த தவறான வதந்திகளால் மக்கள் அச்சப்பட்டு தவிர்த்தும் வருகின்றனர். இதனால், மக்களின் அச்சங்களை போக்குவதோடு, தங்களையும் காத்துக்கொள்ள திரைத்துறையினர் அரசியல்வாதிகள் பலரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

அந்த வகையில் நடிகர் யோகிபாபு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை இன்று எம்.ஜி.எம் மருத்துவமனையில் செலுத்திக்கொண்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்