Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

''யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்'' - உதயநிதி

https://ift.tt/2LbolER

''நான் பெண்களை தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது'' என உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்

திமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சசிகலா குறித்து பேசினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய்ஆனந்த் திவாகரன் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

image

பெண் என்றும் பாராமல் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை கொண்டு உதயநிதி விமர்சித்தது கண்டனத்துக்குரியது எனவும் திவாகரன் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது. பாஜகவின் குஷ்பு, டிடிவி தினகரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், நான் பெண்களை தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

''நான் பெண்களை தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது'' என உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார்

திமுக கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சசிகலா குறித்து பேசினார். இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு, சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய்ஆனந்த் திவாகரன் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

image

பெண் என்றும் பாராமல் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை கொண்டு உதயநிதி விமர்சித்தது கண்டனத்துக்குரியது எனவும் திவாகரன் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டது. பாஜகவின் குஷ்பு, டிடிவி தினகரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் தான் பேசியதற்கு உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். அதில், நான் பெண்களை தவறாக பேசவில்லை. நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்