Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

சிறுத்தையை கொன்று கறி விருந்து: கேரளாவில் ஐந்து பேர் கைது!

கேரளாவில் சிறுத்தையை கொன்று சாப்பிட்ட சம்பவம் இதுவே முதல்முறை என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முனியாரா வனப்பகுதியில் சிலர் சிறுத்தை ஒன்றை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக மங்குளம் சரக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிலிருந்து 10 கிலோ சமைக்கப்பட்ட சிறுத்தையின் இறைச்சி, தோல், பற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

image

இதுதொடர்பாக வினோத் (45), குரியகோஸ் (74) சி.எஸ். பினு (50), சாலி குஞ்சப்பன் (54) மற்றும் வின்சென்ட் (50) ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரித்ததில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து, கொன்று சமைத்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மங்குளம் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போது கைதானவர்களுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கேரளாவில் முதன்முறையாக இறைச்சிக்காக சிறுத்தை கொல்லப்படுவதும் சாப்பிடுவதும் பதிவாகியுள்ளது’’ என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/39UTe8F

கேரளாவில் சிறுத்தையை கொன்று சாப்பிட்ட சம்பவம் இதுவே முதல்முறை என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முனியாரா வனப்பகுதியில் சிலர் சிறுத்தை ஒன்றை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக மங்குளம் சரக வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டிலிருந்து 10 கிலோ சமைக்கப்பட்ட சிறுத்தையின் இறைச்சி, தோல், பற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

image

இதுதொடர்பாக வினோத் (45), குரியகோஸ் (74) சி.எஸ். பினு (50), சாலி குஞ்சப்பன் (54) மற்றும் வின்சென்ட் (50) ஆகிய ஐந்து பேரை பிடித்து விசாரித்ததில் சிறுத்தையை பொறி வைத்து பிடித்து, கொன்று சமைத்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஐந்து பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் குறித்து மங்குளம் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘’இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தை அறிவிக்கப்பட்டுள்ளது. அதை வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972 ன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். தற்போது கைதானவர்களுக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. கேரளாவில் முதன்முறையாக இறைச்சிக்காக சிறுத்தை கொல்லப்படுவதும் சாப்பிடுவதும் பதிவாகியுள்ளது’’ என்றார்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்