Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2ஜிபி இலவச டேட்டா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதற்காக 9,69,047 கல்லூரி மாணவர்களுக்கு, ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி பெறும் வகையில் டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

image

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணையவழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள்( டேட்டா கார்டுகள்) வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார். இந்த டேட்டா கார்டுகளை எங்கு பெறுவது போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

https://ift.tt/2JZpUoA

கொரோனா தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணையவழி வகுப்புகளில் பங்கேற்பதற்காக 9,69,047 கல்லூரி மாணவர்களுக்கு, ஏப்ரல் மாதம் வரை தினமும் 2 ஜிபி பெறும் வகையில் டேட்டா கார்டு இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்

image

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் “கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனுக்காக கல்வி நிறுவனங்கள் இணையவழி வகுப்புகளை நடத்தி வருகின்றன. இந்த இணையவழி வகுப்புகளில் மாணாக்கர்கள் கலந்துகொள்ள ஏதுவாக, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் 9,69,047 மாணாக்கர்களுக்கு ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரை நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி தரவு பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா தரவு அட்டைகள்( டேட்டா கார்டுகள்) வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார். இந்த டேட்டா கார்டுகளை எங்கு பெறுவது போன்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM



from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

கருத்துரையிடுக

0 கருத்துகள்