
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனி நபர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் அது வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும். ஆனால் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு டிசம்பர் 31 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசமும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
https://ift.tt/3rJAbGm
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தனி நபர்கள் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடையவிருந்த நிலையில் அது வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் பிப்ரவரி 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக வருமான வரிக்கணக்கு தாக்கல் அவகாசம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்து விடும். ஆனால் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு டிசம்பர் 31 வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்ட நிலையில் அது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசமும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
from Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

0 கருத்துகள்